Wednesday, July 14, 2010

இளங்கோவடிகள்

இளங்கோ அடிகள் தமிழ்க் காப்பியங்களுள் ஒன்றான சிலப்பதிகாரத்தை எழுதினார். இவர் சேர அரசன் செங்குட்டுவனுடைய தம்பியெனவும், இளவரசுப் பட்டத்தைத் துறந்து துறவறம் மேற்கொண்டவர்..

சிந்து நதிப்பிரதேச நாகரீகம் பற்றி பல வரலாற்று ஆசிரியர்கள், இதுவே பாரத நாகரீகத்தின் தொட்டில் என்று உறுதிப்படுத்தியுள்ளனர். இந்த வரலாறு மட்டுமல்லாது இன்னொரு சகோதர வரலாறும் உண்டு. இந்தச் சகோதரம் மூத்ததா, இளையதா என்று வழக்காடுவது நமது நோக்கமல்ல; உறவு உண்டு. அதுவே காவேரி நாகரீகத்தின் சிலப்பதிகார நாகரீகம்.

தமிழ் மொழியின் தலைக் காப்பியமாக, பல புதுமைகளை மேற்கொண்டு (இந்த புதுமைகளை விவரித்தால் பெருகும்) இளங்கோவடிகள் படைத்த சிலப்பதிகாரம், ஒரு கதையைப் பின்னணியாகக் கொண்ட காவியமா அல்லது ஒரு இனத்தின் வரலாற்றை பேசும் சரித்திர நூல் என்ற பிரமிப்பு எற்படுவது இயற்கை.

மனித நாகரீகத்தின் வெளிப்பாடாக விளங்கும் புற அமைப்புகள் மட்டுமில்லாது, மனிதநேயப் பண்பாடுகளும் நிறைந்த முழுமையான நாகரீகத்தை, இளங்கோவடிகள் காவியத்தில் காட்டுகிறார். சோழ நாட்டில் குணவாயிற் கோட்டம் என்றும் ஆசிரமத்தில் யோக நிலையில் இருந்து அவர் இக் காவியத்தை பாடியிருக்க முடியாது.

Orkut Communities link