Tuesday, March 1, 2011

nellai tamil






Saturday, February 19, 2011

வல்லினம் தமிழர் களம்

Wednesday, February 2, 2011

இன்றைய மாணவர்களின் உளவியல் எதை நோக்கி....”

பொழுது போக்கிற்காக பலருக்கு  இணையதளங்கள் பயன்படலாம். ஆனால் வெளிச்சம் மாணவர்களின்  கல்விக்கு  உதவிடும் பலரை அறிமுகம் செய்வது இந்த இணையம் தான். அதன் வகையில்  இணையதளத்தில்  நம்  கல்விப்பணியினை தொடர்ந்து கவனித்து வந்த செல்வராசு அவர்கள் ,எங்களுடைய பணி இன்னும் பல கிராமபுற மாணவர்களுக்கு போக வேண்டும் என நம்மிடம் கேட்டுகொண்டார். அவரின் அலோசனைப்படி திருவண்ணாமலை,வேலூர். விழுப்புரம் மாவட்டங்களில் அந்தந்த பேரூராட்சிகள் மற்றும் வெளிச்சம் இணைந்து பள்ளிகள் மற்றும் பெண்கள் மற்றும் பொதுமக்களுக்கு நாம் தன்னம்பிக்கை வாழ்வியல் பயிற்சி கொடுக்க   நினைத்தோம்..
               அதன் முதல் முயற்சியாக 31.1.11 அன்று காலை 10 மணியளவில் வந்தவாசி - அரசு பெண்கள்  மேல்நிலைப் பள்ளியில் இன்றைய மாணவர்களின் உளவியல் எதை நோக்கி? என்கிற தலைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியினை வந்தவாசி  நகராட்சி சமூக கல்வி அலுவலர் திரு முனைவர். கணேசன் அவர்கள் ஒருங்கிணைத்திருந்தார்..

     நிகழ்ச்சியில் பங்குபெற்ற சிறப்பு விருந்தினர்கள்:
                      
                                   திரு.க.சீனிவாசன், நகர் மன்ற தலைவர், 
                                                          திருமதி. இரா.வாசுகி பாபு, நகர் மன்ற துணைத் தலைவர்,
                                                    திரு. N.உசேன் பாரூக் மன்னர், Bsc, B.L, M.B.A,   ஆணையாளர்,   நகராட்சி உறுப்பினர்கள் உட்பட்ட பலர் கலந்து கொண்டனர்

 நாம் விசயத்திற்கு வருவோம்!
நாடகம் 

  
கைகளை தூக்கும் மாணவிகள்

             வெளிச்சம் மாணவர்களின் கலை நிகழ்ச்சியாக துவங்கியது, வெளிச்சம் தீபா அவர்களின் பாடலை தொடர்ந்து, நமது குழுவின் சிறு நாடகத்தின் மூலம்  மாணவர்களுக்குள் எழும்பும் கேள்விகளை விளக்கும் வகையிலும், அவர்களின் எதிர்காலம் தீர்மானிப்பது கல்விதான் என்பதையும்  பெற்றோர்களை நேசிப்பது அவர்களின் கடமை எனவும் விளக்கிய போது மாணவர்களின் கண்களில் சிரிப்பின் வழியில் சிந்தனை தூண்டியதை நீங்கள் புகைப்படங்களை பார்க்கலாம்.. மேலும் இன்றைய மாணவர்களின் உளவியல் எதை நோக்கி....” என்ற தலைப்பிலான மாணவிகளுடனான  கலந்துரையாடலை  வெளிச்சம் அமைப்பின்  நிறுவனர் வெளிச்சம் செரீன் அவர்கள் பேசிய போது மாணவர்கள் சிரித்தனர்.  மேலும் எவ்வளவு பேர் அம்மா அப்பாவை பிடிக்காது திட்டீருக்கீங்கன்னு கேட்க சிலர் கைகளை உயர்த்தினர் ஆனால் பெண்ணாய் ஏண்டா பிறந்தோம்னு  எவ்வளவு பேர் கஸ்ட்டபடுறீங்கண்ணு மீண்டும் ஒரு கேள்வியை முன்வைக்க எதிர்பாரா வண்ணம் எல்லா மாணவிகளும் கைகளை உயர்த்தினர். அக்கா தினம் தினம் எல்லா இடத்திலயும் அவமானப்படுறோம் என செல்வி என்கிற மாணவி சொன்ன போது சின்னவயதில் அவர்கள் படும் அனுபங்களின் வலியை நம்மால் உணர முடிந்தது.
சந்தோசமாக


கடைசியாக பயிற்சி எந்த அளவுக்கு இருந்தது என  நாம் மாணவிகளிடம் கேட்க இந்த பயிற்சி  
எங்கள் வாழ்க்கைக்கு உதவும்னு நம்புறேன். சினிமா காரங்களைதான் நான் பெருமையா நினைச்சிருந்தேன். இன்றிலிருந்து எனக்காக கஸ்ட்டபடுற எங்கப்ப்பா அம்மாவை தான்   நினைப்பேன்னு சொல்ல..  அவர்களின் கண்கள் கலங்கியதை வார்த்தைகளில் சொல்ல முடியவில்லை..  அவரை வெளிச்சம் மாணவர்கள் குழு ஆறுதல் சொல்லி விடைபெற்றோம்... பள்ளி தலைமை ஆசிரியர் மீண்டும் எங்கள் மாணவர்களுக்கு பயிற்சி கொடுக்க வரவேண்டும் என நம்மிடம் ஒரு வேண்டுகோள் வைத்தார் நாம் ஏற்று கொண்டோம்  தினம் கிடக்கும் அனுபவங்களை இளைய தலைமுறைக்கு சொல்வதில் படித்து கொண்டிருக்கும் உங்களை போலவே வெளிச்சம் மாணவர்களுக்கும் ஆர்வம் அதிகம்..

இணையம் மூலம் கிடைத்த செல்வராசு அய்யா அவர்களுக்கும், நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த முனைவர்.கணேசன் அவர்களுக்கும் நன்றிகள்..



Tuesday, January 25, 2011

நன்றி சிவசதீஷ்

நம்...
அறிமுகத்திற்கு பின்
வந்த உங்கள்
முதல் பிறந்தநாள்..,இதுவரை
இல்லாத வகையில்
இனிதே துவங்கட்டும்
இந்த நாள்......

எட்டாத
உயரத்தை
இனி எட்டட்டும்
உங்கள் முயற்சிகள் யாவும்.
நட்பும்,சகோதரமும் இரு கண்ணென
வரியாய் வைரமாய்
நேர் நோக்கி
சீர் தூக்கி
கூர் தீட்ட
என் நட்பே நீங்கள் வளர்க.

எல்லார்க்கும் இனியவராய் இருக்க,வாழ்க்கை பயணத்தினை, இயல்பாக இனிமையாக பயணிக்க...!
என் வேணியே நீங்கள்
இளவேனியாய் கலைவாணியாய் சிரஞ்சீவியாய்
வாழ்க பல்லாண்டு
வாழ்க நலமுடன்,வளமுடன்.

பிறந்த நாள் வாழ்த்து கூற
நம் நட்பு
உங்கள் கையில் பூங்கொத்தாய்......

Monday, January 24, 2011

wind mill அமைக்க சிறந்த இடம்

துத்துக்குடி மாவட்டம் கயத்தார் ல் இருந்து 8 கிமி துலைவில் 375 ஏக்கர் கிரைய பத்திரமாக உள்ளது.wind mill
அமைக்க சிறந்த இடம் wind mill test point அருகில் அமைந்துள்ளது.NH 7 ல் இருந்து 8 கிமி ,துத்துக்குடி ல் இருந்து 35 கிமீ எக்கர் 70,000

Tuesday, January 11, 2011

வலிகளை உணர்தவர்கள் மட்டுமே வழிகாட்டியாக முடியும் - மயில்சாமி அண்ணாதுரை

வெளிச்சம் மாணவர்களின் கல்விப்பணியை தங்களுக்கு மகிழ்ச்சியோடு தொடர்ந்து தெரியப்படுத்திவருகிறோம்.. ஏனெனில் உங்கள் வழிகாட்டுதலில் தான் நாங்கள் வளர்கிறோம்.. இந்த பணியில் எங்கள் பணியை பாராட்டி 2009 ம் ஆண்டு நிலவுக்கு சந்திராயன் விண்கலம் அனுப்பிய அறிவியல் தமிழர் மயில்சாமி அண்ணாதுரை அவர்களை சந்தித்து கலந்துரையாடும் வாய்ப்பு கிடைத்தது இந்த இணையத்தின் வாயிலாக.. அந்த சந்திப்பின் நினைவுகளை உங்களிடம் பகிர்ந்து கொள்ள கடமைப்பட்டுள்ளோம்...
வெளிச்சம் மாணவர்களின் கல்வி பயணத்தில் இந்த சந்திப்பை ஒரு அங்கிகாரமாகவே கருதுகிறோம்...
இருவாரங்களுக்கு முன்பு சென்னை வேல்ஸ் பல்கலைகழகத்தில் நடைபெற்ற 18வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் சிறப்பு விருந்தினராக கல ந்து கொள்ள வருகை தந்திருந்த அவரின் சார்பாக அவரது நண்பர்கள் வெளிச்சம் மாணவர்களிடம் இந்த தகவலை சொன்னபோது நாம் நம்மை கிள்ளிகூட பார்த்தோம்.ஏதுமற்ற நிலையில் நிற்கும் நம் பணியை மதித்து அழைத்தது 2018ல் நிலவிற்க்கு சுற்றுலா செல்ல சந்திராயன் கையருகே நிலவு அய்யா.மயில்சாமி அண்ணாதுரை அவர்கள் என்பதால்...
சரியாக மாநாடு முடித்த சிறிது நேரத்தில் நம்மை தொடர்புகொண்ட அரிமா டாக்டர்.சிவக்குமார். உங்களை முதலில் அய்யா சாப்பிடசொன்னார் என சொன்னபொழுது காலையில் இருந்து சாப்பிடாமல் இருந்த மாணவர்களின் பசியை அறிந்த தாய்தான் நமக்கு ஞாபகத்தில் நிற்க.. நாம் நகர்ந்தோம் சாதாரணமானவர்கள் கூட கொஞ்சம் அலட்டிகொள்ளும் காலத்தில் எதார்த்த மனிதர்களைபோல் எளிமையாய் புன்னகையோடு நம்மை வரவேற்றார். முன்பின் தெரியாத மாணவர்கள் அவரின் எளிமையை கண்டு ஆச்சிரியப்பட்டார்கள்..
சாப்பாட்டை முடித்ததும் வேல்ஸ் பல்கலைகழகத்தின் நூலகத்தில் சரியாக 2.30 மணிக்கு நம் மாணவர்களை சந்தித்தார்..

வெளிச்சம் மாணவர்கள் மற்ற ஏழை மாணவர்களின் வாழ்வில் ஏற்றும் செயல்பாடுகளை வெளிச்சம் செரின் அவர்கள் விளக்கினர். அதனை தொடர்ந்து கல்வியை கனவாக கண்டிருந்த மாணவர்களின் கனவு நனவான மாணவர்கள் கல்விக்காக பட்ட வலிகளை கூர்ந்து கேட்டார்..26 ஆறு நாட்களாக கல்லூரிக்கட்டணம் செலுத்த முடியாத மருத்துவம் மற்றும் நர்சிங் மாணவியர்கள் 6 பேரை வலியை கேட்ட அவர் நிச்சயம்என்ன செய்ய வேண்டுமோ அதை நாம் செய்வோம்.. நான் படிக்கும் காலங்களில் நான் பட்ட அதே கஸ்டங்கள் இனியும் தொடராமல் தடுத்தாக வேண்டும் என வருத்தப்பட்டு இனி நாம் பேசாமல் செயல்பாட்டினை செய்வோம் என்றார்..
வெளிச்சம் மாணவர்களின் செயல்பாடு மிகச்சிறப்பாக இருக்கிறது. இது இந்தியாவில் கல்விக்கான மக்கள் இயக்கமாக வளரும் என்கிற நம்பிக்கை இருக்கிறது என்று வாழ்த்தினார்..

இந்த சந்திப்பிற்க்கு பின் தீடீரென தன் தந்தையை இழந்த காரணத்தினால் MBA கல்லூரி படிப்பை தொடரமுடியாமல் தவித்த மாணவி முபிதா பாத்திமா என்கிற மாணவிக்கு ரூபாய் 20000 காசோசலையை வழங்கினார்கள்..
ஒரு மணி நேர உரையாடலில் வெளிச்சம் மாணவர்களின் வலிகளை உணர்ந்தவராய் தன்னுடன் வந்திருந்த பேசியபடி நகர்ந்தார்..
வலிகளை உணர்தவர்கள் மட்டுமே சிறந்த வழிகாட்டியாக இருக்கமுடியும் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டுகளில் இவரும் இவர் நண்பர்களும் அடங்குவர் ..
மொத்த படங்களை பார்க்க:http://picasaweb.google.com/velicham.students/MylsamyAnnaduraiWithVelichamStudents#
Mylsamy Annadurai with Velicham Students

Friday, January 7, 2011

அன்பு காட்ட எப்படிப்பட்ட வாய்ப்பு கிடைத்தாலும் அதை நழுவ விடாதீர்கள். அதைப் பயன்படுத்துங்கள்.

அன்பு காட்ட எப்படிப்பட்ட வாய்ப்பு கிடைத்தாலும் அதை நழுவ விடாதீர்கள். அதைப் பயன்படுத்துங்கள்.
Venkatesh suyambu,
Mobile-+919442331591(Offline)
             +9647708180376 (Online)

Thursday, January 6, 2011

கல்வி கடன் தராத வங்கிகள்...வீணடிக்கபடும் மாணவனின் பறக்கும் கனவு..


கல்வி கடன் தராத வங்கிகள்...வீணடிக்கபடும் மாணவனின் பறக்கும் கனவு..கோவையில் தொடரும் கொடுமை...இவரைப்பற்றி இந்தியாவிற்க்காக பறக்க துடிக்கும் இளம் சாதனையாளர் என இந்து நாளிதளில் வெளியான செய்தியையும் இணைக்கிறோம் -வெளிச்சம் மாணவர்கள். http://www.hindu.com/edu/2007/01/22/stories/2007012200380600.htm

நன்றியுடன் வெளிச்சம் மாணவர்கள்

வெளிச்சம் மாணவர்கள் புத்தாண்டு அன்று சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்களான வெளிச்சம் மாணவிகளுடன் புத்தாண்டு கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்களுக்கான போட்டிகள் நடத்தப்பட்டன..ஓவியம்,பாட்டு, நடனம்,இசை நாற்காலி,பேச்சு போட்டிகள் நடத்தப்பட்டது.. நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு
வெளிச்சம் மாணவர்களால் பரிசுவழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் சிறப்பு விருதினர்களாக லயன் டாக்டர்.சிவக்குமார். லயன்.டாக்டர்.மணிலால், மற்றும் டாக்டர்.வில்சன், போன்றவர்கள் கலந்து கொண்டார்கள்..விழாவில் டாக்டர் சந்திராயன் மயில்சாமி அண்ணாதுரை அவர்களும்,வில்சன் அவர்களும் இணைந்து வெளிச்சம் மாணவி முஃபிதா பாத்திமா அவர்களுக்கு படிப்பிற்க்காக ரூபாய் 20000 வழங்கப்பட்டது..

எல்லோருக்கும் புத்தாண்டு சந்தோசத்தை கொடுத்திருக்கும் நம் மாணவிக்கு கல்வி கொடுத்திருக்கிறது....

நன்றியுடன்
வெளிச்சம் மாணவர்கள்