Tuesday, January 25, 2011

நன்றி சிவசதீஷ்

நம்...
அறிமுகத்திற்கு பின்
வந்த உங்கள்
முதல் பிறந்தநாள்..,இதுவரை
இல்லாத வகையில்
இனிதே துவங்கட்டும்
இந்த நாள்......

எட்டாத
உயரத்தை
இனி எட்டட்டும்
உங்கள் முயற்சிகள் யாவும்.
நட்பும்,சகோதரமும் இரு கண்ணென
வரியாய் வைரமாய்
நேர் நோக்கி
சீர் தூக்கி
கூர் தீட்ட
என் நட்பே நீங்கள் வளர்க.

எல்லார்க்கும் இனியவராய் இருக்க,வாழ்க்கை பயணத்தினை, இயல்பாக இனிமையாக பயணிக்க...!
என் வேணியே நீங்கள்
இளவேனியாய் கலைவாணியாய் சிரஞ்சீவியாய்
வாழ்க பல்லாண்டு
வாழ்க நலமுடன்,வளமுடன்.

பிறந்த நாள் வாழ்த்து கூற
நம் நட்பு
உங்கள் கையில் பூங்கொத்தாய்......

No comments:

Post a Comment